சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: குஜராத்தில் நடைபெற்ற சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் சொராபுதீன் ஷேக். இவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையவர், முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

Rajkumar Pandiyan discharged in Sohrabuddin encounter case

ஆனால் அவர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. குற்றவாளிகளில் ஒருவராக குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் சேர்க்கப்பட்டிருந்தார்.

இவர் மீது குற்றவியல் வழக்கு தொடர்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்று கூறி மும்பை சி.பி.ஐ. தனி கோர்ட்டு வழக்கில் இருந்து விடுவித்து நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 12வது நபர் ராஜ்குமார் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+