வாரணாசி, வதோதரா என இரட்டை வெற்றி... மோடிக்கு ராஜ்நாத் சிங், அத்வானி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: வதோதராவில் வெற்றி பெற்றுள்ள மோடிக்கு பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தனது வெற்றியைத் தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், வதோதராவில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றுள்ளார். வாரணாசியிலும் மோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே, மோடி பிரதமராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், வதோதராவில் வெற்றி பெற்ற மோடிக்கு பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கும், அக்கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications