For Daily Alerts
Just In
பாஜக தேர்தல் பிரசார குழு தலைவராக ராஜ்நாத் சிங்
கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அப்போது தேர்தல் பிரசாரக் குழு பொறுப்பு தலைவர் பொறுப்பு சுஷ்மா ஸ்வராஜ் அல்லது அருண் ஜேட்லிக்கு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட ராஜ்நாத் சிங்கின் பெயரை மோடி முன்மொழிந்தார்.
இதை ஆட்சிமன்றக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
English summary
BJP president Rajnath Singh Sunday replaced Narendra Modi as the chief of the campaign committee for the 2014 Lok Sabha polls following elevation of the Gujarat chief minister as prime ministerial candidate.
Story first published: Monday, September 30, 2013, 10:45 [IST]