For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நீங்களும் வாங்க".."வந்து யோகா பண்ணுங்க".. தீவிரவாதிகளுக்கும் ராஜ்நாத் சிங் அழைப்பு..

Google Oneindia Tamil News

டெல்லி : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகளும் யோகா கடைபிடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் யோகாவால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் கூறியதாவது...

rajnath

சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமாக பணிகளை செய்யும் வகையில், தங்களது அறிவை நெறிப்படுத்த தீவிரவாதிகளும் யோகா மேற்கொள்ள வேண்டும்.

அறிவுக்கூர்மை என்பது மிகவும் ஆபத்தானதாகும். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களும், அறிவாளிகள்தான். அவர்களிடம் அறிவுக்கூர்மைக்கு எந்த குறைவும் இல்லை.

ஆனால், அறிவுக்கூர்மையை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். பேரழிவுக்காக பயன்படுத்தக் கூடாது. அறிவுக்கூர்மையை கட்டுப்படுத்தும் வேலையை யோகா செய்யும்.

சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யும் வகையில், தங்களது அறிவுக்கூர்மையை தீவிரவாதிகள் நெறிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

English summary
Rajnath Singh calls those involved in terrorist activities are brilliant. He suggests they do yoga
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X