"நீங்களும் வாங்க".."வந்து யோகா பண்ணுங்க".. தீவிரவாதிகளுக்கும் ராஜ்நாத் சிங் அழைப்பு..
டெல்லி : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகளும் யோகா கடைபிடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் யோகாவால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் கூறியதாவது...
சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமாக பணிகளை செய்யும் வகையில், தங்களது அறிவை நெறிப்படுத்த தீவிரவாதிகளும் யோகா மேற்கொள்ள வேண்டும்.
அறிவுக்கூர்மை என்பது மிகவும் ஆபத்தானதாகும். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களும், அறிவாளிகள்தான். அவர்களிடம் அறிவுக்கூர்மைக்கு எந்த குறைவும் இல்லை.
ஆனால், அறிவுக்கூர்மையை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். பேரழிவுக்காக பயன்படுத்தக் கூடாது. அறிவுக்கூர்மையை கட்டுப்படுத்தும் வேலையை யோகா செய்யும்.
சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யும் வகையில், தங்களது அறிவுக்கூர்மையை தீவிரவாதிகள் நெறிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.