ஜெயலலிதாவுக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வருகை?
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால், 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கும்பட்சத்தில் அதற்கு ஹைகோர்ட் மட்டுமே ஜாமீன் அளிக்க முடியும், கீழ் கோர்ட்டுகள் அளிக்க முடியாது என்பது விதிமுறை. எனவே, கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

கர்நாடகாவில் தற்போது தசரா காரணமாக, கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் கோர்ட் மட்டுமே ஹைகோர்ட்டில் இயங்கிவருகிறது. முக்கிய பெஞ்ச் செயல்படவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி இன்று பெங்களூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா தரப்பில், ஜாமீன் மனுவை அவரே தாக்கல் செய்ய உள்ளதாகவும், அடுத்தகட்டமாக நடைபெறும் விசாரணைகளின்போதும் ராம் ஜெத்மலானி ஆஜராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராம் ஜெத்மலானி பாஜகவில் இருந்தவர். சமீபத்தில் விலகினார். மேலும், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ராம் ஜெத்மலானி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications