ராமருக்கு பிரம்மாண்ட கோவில்.. அயோத்தியில் பூமி பூஜை.. எங்கெங்கும் நிறைந்து காணப்படும் பிரதமர் மோடி!
அயோத்தி: ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்படும் நிலையில் அயோத்தி முழுவதும் எங்கெங்கும் பிரதமர் நரேந்திர மோடி நிறைந்து காணப்படுகிறார்.
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு வழங்கியது. இந்த நிலையில் இன்று சர்ச்சைக்குரிய இடமாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
Recommended Video
இதனால் அயோத்தி முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது. அயோத்தியில் இன்றைய தினம் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வந்த நிலையில் இரு உண்மையான விஷயங்கள் தெளிவாகிறது. ஒன்று, பல ஆண்டுகளாக சிறிய இடத்தில் வசித்த ராமருக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் 3 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான கோவில் எழவுள்ளது.

விழா
இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையேற்கிறார். பலர் இந்த நிகழ்ச்சிக்கு குறிக்கப்பட்ட நேரம் குறித்து பரவலாக பேசினர். பல ஆலோசனைகளுக்கு பிறகு பூமி பூஜைக்கான நேரம் பகல் 12:15:05 முதல் 12:15:38 வரை என குறிக்கப்பட்டது. அதாவது சரியாக வெறும் 33 விநாடிகளில் இந்த பூஜை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த விழாவை காண பெரிய திரைகள் போடப்பட்டு அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

விழா
இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையேற்கிறார். பலர் இந்த நிகழ்ச்சிக்கு குறிக்கப்பட்ட நேரம் குறித்து பரவலாக பேசினர். பல ஆலோசனைகளுக்கு பிறகு பூமி பூஜைக்கான நேரம் பகல் 12:15:05 முதல் 12:15:38 வரை என குறிக்கப்பட்டது. அதாவது சரியாக வெறும் 33 விநாடிகளில் இந்த பூஜை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த விழாவை காண பெரிய திரைகள் போடப்பட்டு அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இமேஜ்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி வரலாற்று சாதனை படைத்தது மோடி அரசு. அது போல் இந்த ஆண்டு அதே தேதியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இரண்டுமே வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளாகும். வந்திருந்த சாமியார்களும் வேறு எந்த விஷயத்தை பேசவில்லை. மோடியின் இமேஜ் குறித்தும் கோயில் குறித்தும் மட்டுமே பேசினர்.

கோயில் திறப்பு
சாலைகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷமும் மோடி ஜிந்தாபாத் கோஷமும் விண்ணை பிளந்தன. இதில் விசேஷம் என்னவென்றால் பிப்ரவரி அல்லது மார்ச் 2024 ஆம் ஆண்டு தற்போது பூமி பூஜை செய்யப்பட்ட இந்த கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு அடுத்த மக்களவை தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் நிலையில் அவர் அந்த கோயிலை திறந்து வைக்கிறார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications