இந்த ஆண்டு இறுதிக்குள் அயோத்தியில் ராமர் கோயில்: சுப்பிரமணியன் சுவாமி உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் கண்டிப்பாக ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும் என நாங்கள் நம்புகிறோம். அந்த தீர்ப்பு வந்தவுடன் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கும். எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக இந்த பணிகள் தொடங்கப்படும். இதற்கான செயல்திட்டம் ஜனவரி 9ம் தேதி வெளியிடப்படும்.

Ram temple will be build in Ayodya: Subramaniyan swamy

ராமர் கோவில் கட்டும் பணியை விஷ்வ இந்து பரிஷத் முயற்சி செய்யப்போவதில்லை. ஏனெனில், ராமர் பிறந்த பூமியில் ராமர் கோயிலை கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை.

இந்து மற்றும் முஸ்லிம்களின் பரஸ்பர ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டப்படும் என்றார். உ.பி. தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை மனதில் வைத்து இந்துக்களை ஒருங்கிணைக்க இதுபோல பிரச்சாரம் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கும் தொடர்பில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+