பார்க்க மட்டும் அல்ல 10ம் வகுப்பு தேர்விலும் 5 பாடங்களில் ஒரே மார்க் வாங்கிய இரட்டை சகோதரிகள்
ராஞ்சி: ராஞ்சியைச் சேர்ந்த பார்க்க ஒரே மாதிரி இருக்கும் இரட்டை சகோதரிகள் 10ம் வகுப்பு தேர்வில் 5 பாடங்களில் ஒரே மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியர் ஷைலேஷ் சட்டோபத்யாயவின் மகள்கள் அபோரூபா, அனோரூபா. அவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை ஐசிஎஸ்சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டை சகோதரிகள் 5 பாடங்களில் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் ஸ்டடீஸில் 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், கணிதத்தில் 98ம், அறிவியலில் 99ம், வரலாறு மற்றும் புவியியலில் 97 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இந்தி பாடத்தில் அபோரூபா 98 மதிப்பெண்களும், அனோரூபா 97 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இது குறித்து சகோதரிகள் கூறுகையில்,
நாங்கள் இருவரும் சேர்ந்து தான் தேர்வுக்கு படிப்போம். அவ்வாறு செய்வது பாடத்தை புரிந்து படிக்க உதவுகிறது. நாங்கள் டாக்டராக விரும்புகிறோம் என்றனர்.
அவர்கள் டியூஷனுக்கு சென்றது இல்லை என்று அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் டாக்டராவார்கள் என்று நம்புவதாக அவர்களின் தாய் மௌசுமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications