குருவாயூர் கோவிலில் இலங்கை பிரதமர் ரணில் நாளை வழிபாடு!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நாளை வழிபாடு நடத்த உள்ளார்.
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாளை சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவிலில் நாளை உச்ச பூஜை முடிந்த பின்பு ரணில் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக ரணில் குருவாயூர் வருகிறார். ரணில் வருகையையொட்டி கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications