நடிகை கொடுத்த பாலியல் புகாரில் இருந்து தப்பினார் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா மகன்!
பெங்களூர்: மத்திய சட்டத்துறை அமைச்சர் டி.வி.சதானந்தகவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீதான பாலியல் பலாத்கார புகாரை போலீசார் கைவிட்டுள்ளனர்.
காதல் என்ற போர்வையில், கார்த்திக் கவுடா தன்னை கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டார், என்று நடிகை மைத்ரி என்பவர் பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து கார்த்திக் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடந்த நிலையில், போலீசார் தற்போது, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், கார்த்திக் மீதான பாலியல் புகாருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மைத்ரி பலாத்காரத்திற்கு உள்ளானதற்கும் ஆதாரம் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர். இதனால் பெரும் தலைவலியில் இருந்து சதானந்தகவுடா குடும்பத்தார் மீண்டுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications