பலாத்காரம் செய்யப் பட்ட 9 வயது சிறுமிக்கு சிகிச்சை மறுப்பு... டெல்லி மருத்துவமனைக்கு நோட்டீஸ்
டெல்லி: பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்கு சிகிச்சை தர மறுத்த மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி, சுபாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த திங்களன்று மாலை தனது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். பாதிக்கப் பட்ட அச்சிறுமியை சிகிச்சைக்காக அருகில் இருந்த சவ்டர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக தகவல் அறிந்த டெல்லி அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதிக்குள், சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை சவ்டர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சவ்டர்ஜங் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ராஜ்பால் கூறுகையில், ‘பலாத்காரம் செய்யப் பட்ட 9 வயது சிறுமியை சிகிச்சைக்காக திங்களன்று இரவு 9 மணிக்கு அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அச்சிறுமிக்கு இங்குள்ள மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர்.
மேலும், பலாத்காரம் செய்யப் பட்டது தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அது தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததும் மேற்கொண்டு சில பரிசோதனைகள் செய்யப் படும் என்றும் தெரிவித்தோம். ஆனால், அதற்கு மறுத்த அச்சிறுமியின் குடும்பத்தார், சிகிச்சை தேவையில்லை எனக் கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர்' எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, சவ்டர்ஜங் மருத்துவமனை மத்திய அரசுக்கு சொந்தமானது என்றும், எனவே, இது தொடர்பான விளக்கம் விரைவில் டெல்லி அரசுக்கு தரப்படும் என்றும் ராஜ்பால் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications