டிவிட்டருக்கு வந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி!
டெல்லி: நாட்டின் நாடித் துடிப்புக்கேற்ப பிரதமர் உள்ளிட்டோரைத் தொடர்ந்து தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் டிவிட்டருக்கு வந்துள்ளார்.
வந்தவுடன் 3 டிவிட்கள் அதில் இடம் பெற்றுள்ளன. 4000க்கும் மேற்பட்ட பாலோயர்கள் கிடைத்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி இதுவரை டிவிட்டரைப் பயன்படுத்தாமல் இருந்து வந்தார். தற்போது அவரும் டிவிட்டருக்கு வந்து விட்டார்.
@RashtrapatiBhvn" title="@RashtrapatiBhvn" class="sliderImg image_listical" width="600" height="338" />@RashtrapatiBhvn என்பதுதான் குடியரசுத் தலைவரின் டிவிட்டர் முகவரியாகும்.

3 டிவிட்கள்
குடியரசுத் தலைவரின் டிவிட்டர் பக்கத்தில் 3 டிவிட்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று குடியரசுத் தலைவர் டிவிட்டருக்கு வந்ததை அறிவிக்கும் செய்தி. மற்றவை குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்டவை.

பிரதமரைத் தொடர்ந்து
பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலமாகவே டிவிட்டரில் இருந்து வருகிறார். அதில் ஒரு டிரென்ட் செட்டராகவும் விளங்குபவர்.

பிரணாப் முகர்ஜி.. லேட்
ஆனால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி லேட்டாக இதற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
டிவிட்டர் வரவேற்பு
இதற்கிடையே டிவிட்டரில் பக்கம் ஆரம்பித்துள்ள குடியரசுத் தலைவருக்கு, டிவிட்டர் வரவேற்பு கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வரவேற்பதில் பெருமை அடைகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications