ரூபாய் நோட்டு பிரச்சினையால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்: ரத்தன் டாடா
பணப்பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படுவதாக ரத்தன் டாடா கருத்து தெரிவித்துள்ளார். பணப்பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மக்கள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 16 நாட்களை கடந்து விட்ட போதிலும், சாதரண, நடுத்தர மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும், புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்காகவும் வங்கி, ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய சூழலே நிலவி வருகிறது.

இதனிடையே இன்றுடன் புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுக்கள் அரசின் பல்வேறு சேவைகளிலும் செல்லுபடியாவதற்கு கடைசி நாளாகும். இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படுவதாக ரத்தன் டாடா கூறியுள்ளார்.
பணப்பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். தேசிய பேரழிவின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏழை எளிய மக்களின் அன்றாடத் தேவைகள் நிறைவேற அரசு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும்டாடா தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications