முதல் முறையாக விளையாட்டு வீரர் கையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம்!
முதல் முறையாக விளையாட்டு வீரர் ஒருவர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராகியுள்ளார்.
டெல்லி: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக விளையாட்டு வீரர் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் செய்தி ஒளிபரப்பு இணை அமைச்சராக இருந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலலில் தங்கம் வென்றவர் ரத்தோர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பைப் பெற்றவர் ரத்தோர். சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை அள்ளிய ரத்தோர் பாஜகவில் இணைந்து அரசியலில் குதித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்று தற்போது தனிப் பொறுப்புடன் விளையாட்டுத் துறை அமைச்சராகியுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சராக விளையாட்டு வீரர் ஒருவர் பதவியேற்பது தற்போதுதான் முதல் முறை. இதனால் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications