மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-ஜெயலலிதா சென்னையில் திடீர் சந்திப்பு
சென்னை: பிரதமரின் ஜன்தன் திட்டத்தை தொடங்கி வைக்க இன்று சென்னை வந்த மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அனைவருக்கும் வங்கி சேவை வழங்கும் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது. மாநிலந்தோறும், மாவட்டந்தோறும் நாடு முழுவதும் ஒரேநாளில் 600 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக ரவிசங்கர் பிரசாத் சென்னை வந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், மாலை 6 மணிக்கு தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு வருகிறார். இங்கு வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதனிடையே பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் முன்பாகவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது இலத்தில் சந்தித்து ரவிசங்கர் பிரசாத் ஆலோசனை நடத்தினார். மரியாதை நிமித்தமாக இருந்த சந்திப்பு நிகழ்ந்ததாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications