For Daily Alerts
Just In
பிரதமர் மோடியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு
டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது ரேஸ்கோர்ஸ் சாலை இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மோடியை ரகுராம் ராஜன் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் நாட்டின் பொருளாதார நிலைமை, விலைவாசி உயர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் ரகுராம் ராஜன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
Comments
English summary
Reserve Bank Governor Raghuram Rajan called on Prime Minister Narendra Modi and is likely to have discussed the macro-economic situation and issues related to price rise.
Story first published: Monday, June 2, 2014, 8:21 [IST]