விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி தகவல்
புதிய 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை போக்கும் விதமாக விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஒரளவு பொதுமக்களுக்கு கிடைத்த போதும் சில்லரை தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை. இதற்கிடையே ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், முன்பு 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தவரையில் இப்போது புதிய நோட்டுகள் அச்சடிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்து விட்டது.
இந்நிலையில் விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்ணின் பின்னணியில் L என்ற எழுத்து மற்றும் ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றிருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications