விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுத்தால் ஏற்பேன்: 'துப்பாக்கி' வீரர் கம் எம்.பி ரத்தோர்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ரத்தோ, தமக்கு மோடி அமைச்சரவையில் விளையாட்டுத் துறை கொடுத்தால் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சுடும் வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவிலான போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் பெற்றுத் தந்தவர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ரத்தோர், காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.ஜோஷியை விட 1,50,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரு நபர் லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறை. மோடி தலைமையிலான அமைச்சரவையில், விளையாட்டு வீரரான ரத்தோருக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ரத்தோர் கூறுகையில், எனது தொகுதிக்கு சேவை செய்யவே நான் விரும்புகிறேன். இருப்பினும் நரேந்திர மோடி எந்தப் பொறுப்பை அளித்தாலும் அதனை ஏற்கத் தயாராக உள்ளேன். அரசியல் அனுபவம் இல்லாத என்னை மோடி திறம்பட வழிநடத்தினார் என்றார்.












Click it and Unblock the Notifications