50 வயதாகும் வரை காத்திருப்போம்.. தீர்ப்புக்கு எதிராக திரளும் கேரளப் பெண்கள் #ReadytoWait
சபரிமலை வழக்கில் வந்த தீர்ப்பு பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை வழக்கில் வந்த தீர்ப்பு பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது. சில பெண்கள் இதற்கு ஆதரவும், சில பெண்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலிற்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும்.
[EXCLUSIVE: சபரிமலை.. அநீதிகளை துடைத்து போடும் தீர்ப்பு இது.. வழக்கறிஞர் அருள்மொழி வரவேற்பு]
|
ஆதரவாக பேசியுள்ளனர்
இந்த தீர்ப்பிற்கு பெரும்பாலான பெண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். விரைவில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். சில ஆண்கள் கூட சபரிமலை கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல விருப்பம் என்றுள்ளனர்.
சிலர் எதிர்ப்பு
இந்த தீர்ப்புக்கு பல பெண்கள் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இது இந்து மதத்திற்கு எதிரான தீர்ப்பு என்று கூறி இருக்கிறார்கள். சபரிமலை கோவிலின் பாரம்பரியத்தை இந்த விஷயம் சிதைக்கிறது என்று இவர் கூறியுள்ளார்.
|
காத்திருப்போம் நாங்கள்
இந்த நிலையில் இதற்கு எதிராக சிலர் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 51 வயது வரை காத்திருப்போம் என்றுள்ளனர். இதற்காக காத்திருக்க தயார் (ரெடி டு வெயிட் - #ReadytoWait ) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள்.
|
மகளிடம் சொல்ல போகிறேன்
பாஜக கட்சியை சேர்ந்த இவர் ''நான் தனிப்பட்ட முறையில் இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்க போகிறேன். கோவிலுக்கு 50 வயது வரை செல்லாமல் இருக்க போகிறேன். என் மகளிடமும் அதையே சொல்ல போகிறேன்'' என்றுள்ளார்.