கொத்து கொத்தாக மயங்கி விழும் மக்கள்.. ஆந்திராவில் பரவும் மர்ம நோய்.. காரணம் என்ன? ஆய்வில் புது தகவல்
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தில் காரியம் மற்றும் நிக்கல் ஆகிய வேதிப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எலுரு என்ற ஒரு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடந்த 4ஆம் தேதி முதல் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
வலிப்பு நோய் ஏற்பட்டது போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு தென்படுகிறது. விசித்திரமாக கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் மயங்கி சாய்வதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

நோயாளிகள்
இதுவரை சுமார் 570 பேர், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 332 பேர் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இந்த நோய்க்கான காரணம் என்ன என்பதை அறிவதற்காக அந்த பகுதியில் உள்ள தண்ணீர் பரிசோதிக்கப்பட்டது. அதில் மாசு கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ குழுக்கள்
ஏன் இது போன்ற நோய் பரவுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழு, புனே தேசிய வைராலஜி இன்ஸ்டியூட் போன்றவற்றை சேர்ந்த குழுக்கள் ஆந்திராவில் ஆய்வு செய்கின்றன. நோயாளிகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில், அளவுக்கதிகமான காரியம் மற்றும் நிக்கல் ஆகிய வேதிப்பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

நோய் அறிகுறிகள்
இந்த வேதிப்பொருட்கள், இவர்கள் உடலில் எவ்வாறு கலந்தது என்பது பற்றி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் மூன்று முதல் ஐந்து நிமிட நேரத்துக்கு வலிப்பு, பதற்றம், வாந்தி, தலைவலி, முதுகு வலி போன்ற அறிகுறிகள் இந்த நோயாளிகளுக்கு ஏற்படுகின்றன.

ரத்த வேதிப் பொருள்தான் காரணம்
45 வயதாகும் ஸ்ரீதர் என்பவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். சிலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோயாளிகளுக்கு எடுக்கப்பட்ட மூளை சிடி ஸ்கேன் ரிப்போர்ட் நார்மல் என்று வந்துள்ளது. எனவே இரத்தத்தில் கலந்துள்ள இந்த வேதிப்பொருட்கள் அளவு காரணமாகத்தான் இந்த மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications