ம.பி.யில் யாதவ ஜாதியைச் சேர்ந்தவர் முதல்வராக தேர்வு! பின்னணியில் பாஜக இப்படி ஒரு காய் நகர்த்தலா?
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது. யாதவ் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கிய பாஜகவின் இந்த வியூகத்திற்கு பின்னால் இருக்கும் சில காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் 164 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வந்தார். இதனால் மீண்டும் முதல்வர் பதவியை பெறும் முனைப்பில் தீவிரமாக சிவராஜ் சிங் சவுகான் இருந்தார்.

மோகன் யாதவ்: அதேபோல், சில சீனியர் தலைவர்களும் முதல்வர் பதவியை கைப்பற்ற தங்களுக்கு மேலிடத்தில் உள்ள நெருக்கம் மூலமாக லாபி செய்தனர். இதனால் கடந்த 3 ஆம் தேதியே சட்டமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டாலும் முதல்வரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி பாஜகவுக்குள் நீடித்தது. ஒருவழியாக நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசத்தில் முதல்வர் யார் என்று அறிவிக்கப்பட்டது.
யாரும் எதிர்பாராத விதமாக மோகன் யாதவ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மோகன் யாதவ் முதல்வராக அறிவிக்கப்படும் வரையில் பாஜகவினருக்கு கூட பலருக்கும் அவரை அறிந்து இருக்கவில்லை. உஜ்ஜைன் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர், 12,941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
யோகம் அடித்தது எப்படி?: கடந்த 2013ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மோகன் யாதவ் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து 2018 மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார். 2020-இல் கமல்நாத் அரசு கவிழ்ந்த பிறகு சிவராஜ் சிங் சவுகான் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், அப்போது மோகன் யாதவ் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சராக இருந்த போதிலும் தற்போது முதல்வராக தேர்வு செய்யப்பட்டது பாஜகவினர் பலருக்கும் வியப்பை கொடுத்தது. சீனியர் லீடர்கள் பலரும் முதல்வர் பதவியை கைப்பற்ற பகீரதபிரயத்தனம் மேற்கொண்டு வந்த நிலையில் மோகன் யாதவிற்கு இந்த யோகம் அடித்தது எப்படி என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பார்ப்போம்.
ஒபிசி வகுப்பு: அதாவது, மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்ததன் தாக்கம் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். அது எப்படி என்றால், இரண்டு மாநிலங்களிலும் 120 லோக்சபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் கணிசமான அளவில் ஒபிசி வகுப்பான யாதவ சமூக மக்கள் வசித்து வருகிறார்கள்.
எனவே, மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்ததன் மூலம் இந்த வாக்குகளை கணிசமான அளவில் பெற முடியும் என பாஜக நம்புகிறது. வரும் லோக்சபா தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்கு வங்கி கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக மேலிடம் இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார்கள். மத்திய பிரதேச முதல்வராக அறிவிக்கப்பட்டு இருக்கும் மோகன் யாதவின் மனைவி உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் என்பதும் இதில் கவனிக்க வேண்டியது ஆகும்.
இந்தியா கூட்டணிக்கு சவால்: கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி யாதவ் சமூக வாக்குகள் அதிகம் கொண்ட இடங்களில் எழுச்சி பெறும் என்ற கணிப்புகளை பாஜக பொய்யாக்கியது. தற்போது மத்திய பிரதேசத்தில் உத்தர பிரதேசத்துடன் தொடர்பு இருக்கும் மோகன் யாதவை முதல்வராக்கியதன் மூலம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுவிட முடியும் என அக்கட்சி நம்புகிறது
பீகாரிலும் யாதவ் சமூகத்தை சேர்ந்த மக்கள் 1.86 கோடி பேர் உள்ளனர். இது அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 14.26 சதவிகிதம் ஆகும். எனவே, பீகாரிலும் லாலுபிரசாத் யாதவை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு கடும் சவால் அளிக்கும் விதமாக பாஜகவின் இந்த தேர்வு அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications