மீண்டும் தலைதூக்கும் ”செம்மரக் கடத்தல்” - தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் கைது
திருப்பதி: திருப்பதி அருகே ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியதாக நெல்லையை சேர்ந்த 4 பேர் உள்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே உள்ள ஜீவசோனா வனப்பகுதியில், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் செம்மரக் கட்டைகளை வெட்டி அடுக்கி வைத்துக் கொண்டிருந்த கடத்தல் கும்பலை போலீசார் கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

ஆனால் போலீசாரின் பிடியில் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் இருந்து 30 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உயரக செம்மரக் கட்டைகள் என்பதால் இதனுடைய மதிப்பு ரூபாய் 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் செம்மரங்களை வெட்டுவதற்கான கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட 9 பேரும் எம்.ஆர்.பல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்ட 9 பேரில் அமானுல்லா, சண்முகம், அரிகிருஷ்ணன், ரமேஷ் ஆகிய 4 பேரும் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மற்ற 5 பேரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications