ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 2 சிறுவர்கள் உள்பட 5 தமிழர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஆந்திராவில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 17 செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 2 சிறுவர்கள் உள்பட 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் சிலர் செம்மரக் கட்டைகளை கடத்தி சென்றதாக தகவல் கிடைத்தது. அவர்களைத் தடுக்க சென்ற போலீசார் மீது செம்மரக் கட்டைகளை கடத்தி சென்றவர்களில் 20க்கும் மேற்பட்டோர் கல்வீசி தாக்கிதாகக் கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்த கட்டைகள் மதிப்பு ரூ.25 லட்சம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின் செம்மரக் கட்டைகளை எடுத்து சென்றவர்களில் தமிழர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications