2ஜி வழக்கு: டெலிகாம் முன்னாள் செயலர் ஷியாமள் கோஸ் விடுவிப்பு- டெல்லி கோர்ட் அதிரடி!
டெல்லி: கூடுதல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் ஷியாமள் கோஸை டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக விடுவித்துள்ளது. இவ்வழக்கில் இருந்து வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளை சி.பி.ஐ. தொடர்ந்துள்ளது. இவ்வழக்குகள் டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 2002ஆம் ஆண்டு ஹட்சன், ஸ்டெர்லிங், பார்தி நிறுவனங்களுக்கு கூடுதலாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு ரூ846.44 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கும் அடங்கும்.
2000ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு செயலராக இருந்த ஷியாமல் கோஸ் மற்றும் 3 நிறுவனங்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டன.
இவ்வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்த குற்றப்பத்திரிகையை ஏற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து நீதிபதி ஷைனி முன்னிலையில் இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன.
இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஷியாமள் கோஸ் மற்றும் 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களை நீதிபதி ஷைனி விடுவித்து உத்தரவிட்டார்.
அப்போது, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தவறான பொய்யான தகவல்கள் ஜோடிக்கப்பட்டுள்ளன; இத்தகைய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த அதிகாரி மீது சி.பி.ஐ. இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் அனைத்துமே வலுவானதாக இல்லை. உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இந்த வழக்கிலிருந்து தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் சியாமள் கோஷ் விடுவிக்கப்படுகிறார் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி ஷைனி.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications