கேரளாவில் மதுபான பார்கள் 30-ந் தேதி வரை செயல்பட சுப்ரீம் கோர்ட் அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேரளாவில் மதுபான பார்கள் வரும் 30-ந் தேதி வரை செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 700 பார்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பார் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மட்டும் பார் நடத்த அனுமதி கொடுப்பது ஏன் என்று கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் முடிவில், மதுபான பார்களை மூட கேரள அரசு பிறப்பித்த உத்தரவுக்கு வரும் 30-ந் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதுவரை மதுபான பார்கள் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications