உகாதிக்கு நோ லீவ்... ஏப்ரல் 1 வரை வங்கிகள் விடுமுறையின்றி பணியாற்ற ரிசர்வ் வங்கி உத்தரவு
மார்ச் 25 முதல் ஏப்ரல் 1ஆம் தேதிவரை வங்கிகள் விடுமுறையின்றி பணியாற்றுங்கள் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: சனி, ஞாயிறு, உகாதி பண்டிகைக்கு வங்கிகள் விடுமுறை விட வேண்டாம் என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி வரை விடுமுறையின்றி பணியாற்றுங்கள் என்றும் நாடுமுழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கிகளுக்கு ஞாயிறு மற்றும் மிக முக்கிய பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படும். நவம்பர் 8ஆம் தேதி உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சனி, ஞாயிறு, பண்டிகை நாட்களின் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றினர். இந்த நிலையில் இன்னும் 6 தினங்கள் அதாவது மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை விடுமுறை எடுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

2016 -17 ஆம் நிதியாண்டு முடிய இன்னும் 6 நாட்களே உள்ளன. இந்த நிலையில் நிறுவனங்கள் வரிநிலுவைகளை செலுத்த வேண்டும். எனவே வங்கிகள் விடுமுறையின்றி செயல்படுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
சனி, ஞாயிறு, உகாதி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூட ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளும், தனியார் வங்கிகளும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் திடீர் அறிவிப்பு வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications