உள்ளாடையை கழற்றி நிர்வாணம் ஆக்குவது பலாத்கார முயற்சி ஆகாது.. ராஜஸ்தான் ஹைகோர்ட் தீர்ப்பு
ஜெய்ப்பூர்: சிறுமியின் உள்ளாடையை கழற்றுவதும் நிர்வாணமாக நிற்பதும் பலாத்கார முயற்சி ஆகாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, கடந்த 33 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் இந்த தீர்ப்பை அளித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி என்பவரது மகன் சுவலால். கடந்த 1991 ஆம் ஆண்டு சுவலால் (அப்போது வயது 26) தனது பகுதியில் வாட்டர் பூத் ஒன்றில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்த ஆறு வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்றுள்ளார்.

மேலும் சிறுமியின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தியுள்ளார். அப்போது அச்சத்தில் சிறுமி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து சிறுமியை தூக்கி சென்று அத்துமீறலில் ஈடுபட முயன்ற சுவலால் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் பேரில் சுலாவல் மீது வழக்குப்பதிவு செய்யபப்பட்டது.
சுலாவால் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக டோங்க் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாவட்ட நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சுலாவல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 33 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் சமீபத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பாலியல் பலாத்கார முயற்சி கிடையாது.
பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் குற்றம் ஆகும். எனவே சட்டப்பிரிவு 376 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் இந்த குற்றச்சாட்டு வராது. பாலியல் பலாத்கார முயற்சி என்றால் அதையும் தாண்டி செய்து இருக்க வேண்டும். அப்படியான எதுவும் இல்லை என்பதால் ஐபிசி 354 என்ற அடிப்படையில் பெண்ணின் கண்ணியத்தை பாதித்தல் என்ற அடிப்படையில் தான் தண்டனை வழங்க முடியும். எனவே குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்குகளை ரத்து செய்து விட்டு மானபங்கப்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications