இனி தாறுமாறா மெசெஜ் அனுப்ப டுவிட்டரும் ரெடி- 140ல் இருந்து 10,000க்கு உயர்ந்த லெட்டர்ஸ் கவுண்ட்!
டெல்லி: பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் கட்டுப்பாடு 140 லிருந்து 10,000 ஆக அதிகரிக்க போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தது அந்நிறுவனம்.
அந்த அறிவிப்பு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது டுவிட்டர் நிர்வாகம்.
இதனால் இனிமேல் டிவிட்டரிலும் சகட்டுமேனிக்கு வார்த்தைகளைப் போட்டு ரொப்பலாம்.
நேற்று இல்லாத மாற்றம் என்னது
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின்படி தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மட்டுமே பார்க்கலாம்
தனிப்பட்ட செய்தி அனுப்பும் வசதி என்பது தனிப்பட்ட ஒருவருக்கு செய்தி அனுப்ப பயன்படுத்தப்படுகிறது. செய்தியை அந்த ஒருவர் மட்டுமே பார்க்க முடியும்.
மின் அஞ்சல் சேவையாகுமா
இந்த புதிய முயற்சியின் மூலம் டுவிட்டர், மின் அஞ்சல் சேவையாக செயல்பட விரும்புவதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அது அப்படியேதான் இருக்கும்
மற்றப்படி ஒரு டுவிட்டுக்கு 140 என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவங்க பரவாயில்லை போலயே
மற்ற சமூக வலைதளங்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.