ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த மும்பை இளைஞர்கள் - மீண்டும் தாயகம் திரும்ப விருப்பம்
மும்பை: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்த மும்பை புறநகரைச் சேர்ந்த நான்கு இளைஞர்களில், இறந்ததாகக் கருதப்பட்ட ஆரிப் மஜீத் தாயகம் திரும்பி விட்ட நிலையில், மீதமுள்ளவர்களும் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஆரிப் மஜீத், ஷாகீன் தன்கி, பகத் ஷேக் மற்றும் அமான் ஆகிய 4 இளைஞர்கள் கடந்த மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புனித தலங்களை தரிசிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் நால்வரும் மீண்டும் நாடு திரும்பவில்லை.
மாயமான நான்கு இளைஞர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகக் கூறப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 26-ந் தேதி மாயமான மாணவர்களில் ஒருவரான ஆர்ப் மஜீத் வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியானது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தானே, கல்யாண், நவிமும்பை பகுதிகளை சேர்ந்த பலரிடம் தீவிரவாத தடுப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரகுமான் தவுலாதி மற்றும் அகமது ரத்தேப் ஆகியோர் சம்பந்தப்பட்ட 4 மாணவர்களையும் மூளைச்சலவை செய்து அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு கொள்ள வைத்தது தெரியவந்தது. மேலும், ஆதில் தோலரே என்ற பழ வியாபாரிக்கும் இதில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் உள்ள அந்த நான்கு பேரும் தற்போது நாடு திரும்ப விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த போதும், தொடர்ந்து அந்த இளைஞர்கள் நான்கு பேரும் தங்களது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாகவும், நான்கு இளைஞர்களில் ஒருவரின் தந்தை மூலமாக அவர்கள் நாடு திரும்பும் விருப்பம் தேசிய புலனாய்வு அமைப்புக்கு தெரியப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஆரிப் மஜித் உயிரோடு நாடு திரும்பியுள்ளதாகவும், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப் பட்டு வருவதாகவும் தேசிய புலனாய்வு அமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications