21 மாதங்களில் இல்லாத அளவு அத்தியாவசிய பொருள் விலையேற்றம்.. என்ன செய்யப்போகிறது அரசு?
டெல்லி: சில்லரை விலை பண வீக்கம் கடந்த மாதத்தில் 5.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதம் இது 5.39 சதவீதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
இதில் காய்கறிகள் விலைதான் கடுமையான ஏற்றம் கண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 4.82 சதவீதமாக இருந்த காய்கறி விலை, மே மாதத்தில் 10.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், பருப்பு வகைகள் விலை மட்டுமே ஓரளவுக்கு குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை 34.13 சதவீதத்தில் இருந்து 31.57 சதவீதமாக குறைந்துள்ளது.
முட்டை விலை ஏப்ரலில் 6.64 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதம் 9.13 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உணவு பொருள் விலைவாசி என்று எடுத்து பார்த்தால், அது 7.55 சதவீதமாக உள்ளது. முந்தைய மாதம் இது 6.32 சதவீதமாகத்தான் இருந்தது.

கடந்த மாதத்தில் சில்லரை விலை பண வீக்கம் 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது. இதற்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது என்று விடை தருகிறது அந்த புள்ளி விவரம்.
இதுபோல விலைவாசி உயர்ந்து கொண்டிருந்தால், ஜூன் மாதமும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது என்று வந்த தகவல்கள் இந்த அச்சத்தை உறுதி செய்கின்றன.
இவ்வாண்டு பருவமழை சிறப்பாக பெய்து உணவு தானிய விளைச்சல் அமோகமாக இருந்தால் மட்டுமே நடுத்தர, ஏழை, எளிய மக்களை விலைவாசி பிடியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று கை பிசைகிறது அரசு.
விலைவாசி இப்படி ஏறிக்கொண்டிருந்தால், வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முன்வர வாய்ப்பில்லை என்று மற்றொரு குண்டை தூக்கி போடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications