21 மாதங்களில் இல்லாத அளவு அத்தியாவசிய பொருள் விலையேற்றம்.. என்ன செய்யப்போகிறது அரசு?
டெல்லி: சில்லரை விலை பண வீக்கம் கடந்த மாதத்தில் 5.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதம் இது 5.39 சதவீதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
இதில் காய்கறிகள் விலைதான் கடுமையான ஏற்றம் கண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 4.82 சதவீதமாக இருந்த காய்கறி விலை, மே மாதத்தில் 10.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், பருப்பு வகைகள் விலை மட்டுமே ஓரளவுக்கு குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை 34.13 சதவீதத்தில் இருந்து 31.57 சதவீதமாக குறைந்துள்ளது.
முட்டை விலை ஏப்ரலில் 6.64 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதம் 9.13 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உணவு பொருள் விலைவாசி என்று எடுத்து பார்த்தால், அது 7.55 சதவீதமாக உள்ளது. முந்தைய மாதம் இது 6.32 சதவீதமாகத்தான் இருந்தது.

கடந்த மாதத்தில் சில்லரை விலை பண வீக்கம் 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது. இதற்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது என்று விடை தருகிறது அந்த புள்ளி விவரம்.
இதுபோல விலைவாசி உயர்ந்து கொண்டிருந்தால், ஜூன் மாதமும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது என்று வந்த தகவல்கள் இந்த அச்சத்தை உறுதி செய்கின்றன.
இவ்வாண்டு பருவமழை சிறப்பாக பெய்து உணவு தானிய விளைச்சல் அமோகமாக இருந்தால் மட்டுமே நடுத்தர, ஏழை, எளிய மக்களை விலைவாசி பிடியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று கை பிசைகிறது அரசு.
விலைவாசி இப்படி ஏறிக்கொண்டிருந்தால், வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முன்வர வாய்ப்பில்லை என்று மற்றொரு குண்டை தூக்கி போடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications