சுயசரிதை எழுதுகிறார் முன்னாள் நீதிபதி கர்ணன்.. வருகிறது அடுத்த அணுகுண்டு?
உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சுயசரிதை புத்தகம் எழுத முடிவு செய்துள்ளார்.
கொல்கத்தா : நீதித்துறையில் செய்ய வேண்டிய சீர் திருத்தங்கள் குறித்து தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் எழுத ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் திட்டமிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் நாட்டிலேயே முதன் முறையாக நீதிபதியாக இருந்த போதே 6 மாத சிறைத் தண்டனை உத்தரவிற்கு ஆளானர் தமிழகத்தை சேர்ந்த கர்ணன். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்னரே கர்ணன் தலைமறைவானார். இந்நிலையில் ஜூன் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் கோவை அருகே கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது கொல்கத்தா பிரெசிடென்சி சிறையில் உள்ள கர்ணன், 6 மாத சிறைக் காலத்தில் சுயசரிதை எழுத திட்டமிட்டுள்ளார். இந்த சுயசரிதையின் முக்கியமாக சிறைத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கர்ணன் திட்டமிட்டுள்ளார். மேலும் நீதிபதிகள் நியமனம், 1971 நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது என்பவை இடம்பெற உள்ளதாக நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா கூறியுள்ளார்.

முக்கிய அம்சங்கள் என்ன?
தற்போது நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் முறையில், இந்திய தலைமை நீதிபதி மடற்றும் 4 மத்த நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் நியமனமும், பணியிட மாற்றமும் நடைபெறுகிறது. ஆனால் கர்ணன் தன்னுடைய சுயசரிதையில் வெளிப்படையான முறையில் நீதிபதி நியமனம் இருக்க வேண்டும். காலியிடங்கள் மற்றும் விண்ணப்ப முறையில் நீதிபதி நியமனம் நடத்த வேண்டும் என்று கூற உள்ளதாக நெடும்பாரா கூறியுள்ளார்.

கைகளால் எழுதுகிறார்
நீதிபதி கர்ணனின் சுயசரிதை புத்தகத்தை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. கர்ணன் எழுத்து மூலமாக கொடுக்கும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.

ஊழ்ல் புகார் சொன்னவர்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்க எதிராகப் பல்வேறு ஊழல் புகார்களைத் தொடர்ச்சியாகக் கூறி வந்தார். அதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டார்.அவர் மீது உச்சநீதி மன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.

என்ன பூதம் கிளம்புமோ?
நீதிபதியாக இருந்த போதே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவை பிறப்பித்தவர் கர்ணன். தற்போது தன்னுடைய சுயசரிதையில் என்னென்ன புதிய சர்ச்சைகள் எழப் போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications