ரோகித் வெமுலா தாயாருக்கு நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: அண்மையில் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலாவின் தாயாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஹைதராபாத் பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த ஜனவரி 17-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட பிஎச்டி மாணவர் ரோகித் வெமுலா. இந்த தலித் மாணவரின் தற்கொலை நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகிறார் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா. இந்த நிலையில் ராதிகா வெமுலாவுக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications