ரூ.11,400 கோடி மோசடி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளைக்கு சீல் வைப்பு
ரூ11, 400 கோடி மோசடி செய்யப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளைக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Recommended Video

மும்பை: ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடிக்கு வங்கி கிளையில் இருந்தே உத்தரவாதம் தரப்பட்டதால் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு டிபிஐ சீல் வைத்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி சர்வதேச வங்கிக் கிளைகளில் கடனீட்டு பத்திரங்களின் மூலம் ரூ 11,400 கோடி கடன் பெற்றுவிட்டு ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

இதை புதிதாக பொறுப்பேற்ற வங்கி அதிகாரி ஒருவர் கண்டறிந்தார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் நீரவ் மோடி தலைமறைவாகி வெளிநாட்டுக்கு தப்பிசென்றுவிட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின்பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.11, 400 கோடி மோசடி செய்த நீரவ் மோடிக்கு வங்கி கிளையில் இருந்தே உத்தரவாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து மும்பை எம்சிபி பிரேசி ஹவுஸ் பகுதியில் உள்ள அந்த வங்கிக் கிளைக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications