சிறையில் சசிகலாவுக்கு சவுகரியம் செய்ய ரூ. 2 கோடி லஞ்சம்: புகழேந்தியிடம் 2 மணிநேரம் விசாரணை
Recommended Video

பெங்களூர்: சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகள் செய்து கொடுக்க போலீசுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக நிர்வாகி புகழேந்தியிடம் ஊழல் தடுப்பு படை விசாரணை நடத்தியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அங்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா தெரிவித்தார்.

வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்றும் ரூபா தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டகுழு விசாரணை நடத்தி கர்நாடக அரசிடம் அறிக்கையை சமர்பித்தது.
சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து விசாரித்த அந்த குழு ரூ. 2 கோடி லஞ்சம் குறித்து விசாரிக்கவில்லை. மாறாக லஞ்சப் புகார் பற்றி ஊழல் தடுப்பு படை விசாரணை நடத்த வேண்டும் எந்று அந்த குழு பரிந்துரை செய்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு படை போலீசார் சத்திய நாராயணராவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவின் ஆதரவாளரான புகழேந்திக்கு ஊழல் தடுப்பு படை சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை. நேற்று காலை காலை தான் அவர் விசாரணைக்கு வந்தார்.
அவரிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் எப்பொழுது மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் என்று போலீசார் புகழேந்தியிடம் கூறியுள்ளனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications