ரூ.25 கோடி கொடுக்கிறாயா, ரகசியத்தை வெளியிடவா?: இந்திராணியை மிரட்டிய மகன் மிகைல்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திராணியின் ரகசியங்களை வெளியே கூறாமல் இருக்க அவரிடம் ரூ. 25 கோடி கேட்டு மகன் மிகைல் போரா மிரட்டியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஷீனா போரா தனது தாய் இந்திராணி முகர்ஜியால் கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்திராணி ஷீனாவை கொலை செய்த அன்று தனது மகன் மிகைல் போராவையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் மிகைல் இந்திராணியின் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில் மிகைல் பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பொய்

பொய்

இந்திராணி தனது தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியிடம் மகள் ஷீனா, மகன் மிகைலை தனது தங்கை, தம்பி என்று தெரிவித்திருந்தார்.

மிகைல்

மிகைல்

இந்திராணியின் ரகசியங்களை வெளியே தெரிவிக்காமல் இருக்க தனக்கு ரூ.25 கோடி அளிக்குமாறு மிகைல் இந்திராணியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

பணம்

பணம்

இந்திராணி தனது மகன் மிகைலுக்கு மாதாமாதம் ரூ.15 ஆயிரம் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பெங்களூரில் சொத்து வாங்க தனது தாயிடம் ரூ.25 கோடி கேட்டு மிரட்டியுள்ளாராம்.

கார்

கார்

கையில் அவ்வளவாக பணம் இல்லாமல் இருந்த மிகைல் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஷீனாவின் கொலை குறித்து தெரிந்திருந்த மிகைல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அது பற்றி ஏன் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலை, உறவு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி மிகைல் இந்திராணியை மிரட்டியுள்ளார்.

ஷீனா

ஷீனா

ஷீனாவின் நெருங்கிய தோழி ஒருவர் கவுஹாத்தியில் உள்ள போராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த மிகைல் அவரிடம் ஷீனா மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளதாகக் கூறி மழுப்பியுள்ளார். மிகைலின் நடவடிக்கை ஷீனாவின் தோழிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+