மது விலக்கினால் இப்படியெல்லாம் நன்மை கிடைக்குமா.. பீகார் சேமித்தது ரூ.5,280 கோடியாம்!
Recommended Video

பாட்னா: பீகாரில் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஆண்டொன்றிற்கு சுமார் ரூ.5,280 கோடி சேமிக்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பீகார் மாநிலம் முழுவதும் மது விற்பனையை தடை செய்து மதுவிலக்கு அறிவித்தார். பீகாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், மதுவிலக்கால் எந்தளவுக்கு பலன் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

ஆசிய அபிவித்தி ஆராய்ச்சி நிறுவனம் பீகார் மாநிலத்தின் வர்த்தகம் குறித்து ஆய்வு செய்து ஆராய்ச்சி முடிவை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில், பீகாரில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதன் விலைவாக, அம்மாநிலத்தில் தேன் விற்பனை 380 சதவிகிதமும், பாலாடைக்கட்டி 200 சதவிகிதமும், வெண்ணெய், பால் 40 சதவிகிதமும் விற்பனை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மதுவிலக்கு அறிவிக்கப்பட்டபின் பெண்கள் விலை உயர்ந்த சேலைகள் வாங்குவதில் கவனம் செலுத்தியதால், விலை உயர்ந்த சேலைகளின் விற்பனை 1,751 சதவிகிதம் உயர்ந்துள்ளது எனவும் உயர்தர ஆடைகளின் 910 சதவிகித அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவில் முக்கியமான தகவல் என்னவென்றால், பீகார் மாநிலத்தில் 19 சதவிகித குடும்பங்கள், இதற்கு முன்பு மதுவிற்கு செலவழித்த பணத்தை இப்போது புதிய சொத்துகளை வாங்க பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மது விலக்கால் பீகார் மாநிலத்தில், மாதந்தோறும் ரூ.440 கோடி சேமிக்கப்படுவதாகவு இதனால், ஆண்டுக்கு ரூ.5,280 கோடி சேமிக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
அதிமுக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழக அரசு இன்னும் மது விலக்கை அமல்படுத்துவதைப் பற்றி மௌனம் காக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications