நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைளால் மட்டுமே தீர்வு... நிதின் கட்காரி 'பொளேர்'
நாட்டில் நடக்கும் சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களால் மட்டுமே தீர்வு தரமுடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மும்பை: நாட்டில் நடக்கும் சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களால் மட்டுமே தீர்வு தரமுடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நிதின் கட்காரி பேசியதாவது:
பொருளாதாரம், தேசியவாதம், உடல் நலம், கல்வி ஆகிய அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் பிரதிபலிக்கிறது. சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும்.

மார்க்ஸியம், சோசலிசம் உள்ளிட்ட கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் உலகத்திற்கே வழிகாட்டுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம், இந்துத்துவா கொள்கையையும் உள்ளடக்கியது. ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக சமூகத்தில் நிலவும் எதிர்மறை கருத்துகளை மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
கல்வி, சுகாதாரம். ஆளுமை, மேம்பாடு, நாட்டுக்காக புரிந்த சேவை ஆகிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிறந்த அம்சங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.












Click it and Unblock the Notifications