சிறையில் தொடர்ந்து சலுகைகள் அனுபவித்து வரும் சசிகலா... பார்வையாளர்களை சந்திப்பதில் அத்துமீறல்
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர்கள் அவ்வப்போது சந்தித்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: சிறை கைதிகளை பார்வையாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க வேண்டும் என்ற விதியை பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா மீறியுள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசியும், இளவரசியும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா சிறையில் சலுகைகளை அனுபவித்து வருவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. சசிகலாவுக்கு 5 அறைகள் இருப்பதும், தனியே சமையலறை இருப்பதும் இதற்காக அவர் சிறைத் துறை ஏடிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா புகார் கூறியிருந்தார்.

வீடியோ காட்சிகள்
இதை விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்தது. அதில் சசிகலா சலுகைகளை பெற்றது உண்மை என்று தெரியவந்தது. மேலும் அவரும் இளவரசியும் சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. சிறையில் உள்ள சசிகலாவை யாரெல்லாம் சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்டிஐ மூலம் கேட்டு பெற்றது. இதற்கு சிறைத் துறை அதிகாரிகள் சில தகவல்களை கொடுத்துள்ளனர்.

விதிமீறல்
அதில் கடந்த 26.4. 2017-இல் விவேக் ஜெயராமனும் அவருடைய மனைவியும் இளவரசியை சந்தித்துள்ளனர். இதை தொடர்ந்து மே 6 2017-இல் கிட்டதட்ட 10 நாட்களில் மீண்டும் இளவரசியை விவேக் சந்தித்துள்ளார். தண்டனை கைதிகளை 15 நாட்களுக்கு ஒரு முறையே சந்திக்க முடியும் என்ற விதியை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்திப்பு
அதுபோல் 12.5.2017-இல் சசிகலாவை அவரது வழக்கறிஞர் அசோகன் சந்தித்துள்ளார். பின்னர் 10 நாட்கள் இடைவெளியில் அதாவது மே 22-ஆம் தேதி அசோகன் , சசிகலாவை மீண்டும் சந்தித்துள்ளார். அதுபோல் சசிகலாவை அவரது அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரு நாட்கள் சந்தித்துள்ளார். அதன்பின்னர் பிப்ரவரி 18, 20, 23, 28, மார்ச் 1-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு நாள் விட்டு மறு நாளோ அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறையோ பார்வையாளர்களை அவர் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.

டிடிவி தினகரன் சந்திப்பு
கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் வெற்றி பெற்ற தினகரன் டிசம்பர் 28-ஆம் தேதி சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். அப்போது அங்குள்ள பதிவேட்டில் அவர்கள் சந்தித்தாக குறிப்பிட்டிருந்த நேரம் பிற்பகல் 12.10 முதல் 12.55 வரை மட்டுமே. ஆனால் ஆங்கில ஊடகத்தின் நிருபர் கிட்டதட்ட 45 நிமிடங்கள் சசிகலாவும் தினகரனும் சந்தித்தனர் என்று பதிவேடு கூறும்போது அவர் சிறை வளாகத்தில் 3 மணி நேரமாக உள்ளே இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறையில் விதிமீறல் இல்லை
இதற்கு தினகரன் கூறுகையில் பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று சசிகலாவை சந்திப்போம். ஒருவர் பார்த்துவிட்டு வந்து காத்திருப்பு அறையில் காத்திருப்பர். இதுபோல் ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்துவிட்டு அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வருவோம். எனவே சசிகலாவை சிறைத் துறை விதிகளுக்குட்பட்டே சந்தித்தோம். காத்திருக்கும் நேரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விளக்கமளித்துள்ளார். எனினும் குறுகிய நாட்களில் சசிகலாவை பார்வையாளர்களையும், வழக்கறிஞர்களையும் சந்தித்துள்ளது விதிகளை மீறிய செயலாகவே கருதப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications