டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவு சரிவு.. 72 ரூபாய்க்கு கீழே வீழ்ச்சி
சென்னை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவடைந்துள்ளது. 9 மாதங்களில் முதல் முறையாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாயாக பெரும் சரிவடைந்துள்ளது.
வியாழக்கிழமை மாலை வர்த்தக முடிவில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.81 என்ற அளவில் இருந்தது. இன்று காலை 9:20 மணி நிலவரப்படி, ரூபாய் மதிப்பு 72.02 ஆக குறைந்தது.

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களால் இந்திய பங்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில், டிசம்பர் 2018 க்குப் பிறகு முதல் முறையாக இந்திய ரூபாய் இன்று, ஒரு டாலருக்கு 72 க்கு கீழே சரிந்து அதிர்ச்சியளித்துள்ளது.
பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலையை மாற்றுவதில், இந்திய அரசு செயலற்ற தன்மையுடன் இருப்பது முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 903 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை விற்றுள்ளனர். இது உட்பட, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ. 10,655 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு காரணங்களை தவிர, வெளிநாட்டு சந்தைகளில் டாலர் வலுவான நிலையில் இருப்பதும், ரூபாய் மதிப்பு குறைய ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்தக பதற்றம், உலகளாவிய நிதிச் சந்தைகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீன யுவானின் சமீபத்திய இறங்குமுகம் மற்றும் ஹாங்காங்கில் நடைபெறும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் முதலீட்டாளர்களின் கவலைகளை அதிகரித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிசம்பர் 15 ஆம் தேதி வரை சீனப் பொருட்களுக்கான கூடுதல் வரிகளை தாமதப்படுத்த ஒப்புக் கொண்டாலும், இந்த ஒப்பந்தம் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்ற பீதி வர்த்தகர்களிடம் உள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications