மகரஜோதி: சபரிமலை ஐயப்பன் ஜோதியாக காட்சி தரும் 'பொன்னம்பல மேடு'
பம்பை: சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக காட்சி தரும் இடம்தான் பொன்னம்பல மேடு. நடப்பாண்டில் மகரஜோதியை காண பொன்னம்பல மேட்டில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சபரிமலையில் மண்டலவிளக்கு பூஜை நிறைவடைந்து மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நாள்தோறும் 5,000 பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேநேரத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மகர ஜோதி நாளில் பொன்னம்பல மேட்டில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஐயப்ப பக்தர்கள் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியை பார்ப்பதை வாழ்நாள் பாக்கியமாக கருதுகின்றனர்.
இந்த மகரஜோதியை தரிசிப்பதற்கு ஏற்ப தங்களது யாத்திரை திட்டத்தை வகுத்துக் கொள்வர். அன்றைய நாளில் பொன்னம்பல மேட்டில் குடில்கள் அமைத்து தங்கவும் அனுமதிக்கப்படுவர். பொன்னம்பல மேட்டில் ஜோதியை தரிசித்தவுடன் பக்தர்கள் யாத்திரையை நிறைவு செய்வர்.
இந்த பொன்னம்பல மேடு சபரிமலை சன்னிதானத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வனப்பகுதியில் பொற்கோவில் ஒன்று பூமிக்கு கீழே இருக்கிறது என்பது நம்பிக்கை. இதனடிப்படையில்தான் இந்த பகுதிக்கு பொன்னம்பல மேடு என அழைக்கப்படுகிறது.
தற்போது இப்பொன்னம்பல மேட்டில் ஒரு மேடை மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை முன்வைத்து பொன்னம்பல மேட்டுக்கு பல்வேறு புராண கதைகளும் உண்டு. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த முறை பொன்னம்பல மேடு செல்ல அன்று மகர ஜோதியை அருகில் தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் பக்தர்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications