மழை பிரச்சினைகளால், சபரிமலை செல்லும் தமிழ்நாடு பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது
Subscribe to Oneindia Tamil
சபரிமலை: மழை காரணமாக இந்த வருடம் இதுவரை சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாம். இதனால் அரசு பஸ்களில் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வது வழக்கம். குறிப்பாக, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, தேனி, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் சபரிமலை செல்வார்கள்.

இவ்வாண்டு மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் வருமானமும் குறைந்தது.












Click it and Unblock the Notifications