சபரிமலைக்கு சென்ற ஆந்திர மாநில பெண் மீது தாக்குதல.. உச்சகட்ட பதற்றம்

Subscribe to Oneindia Tamil

நிலக்கல்: சபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10- 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டக்காரர்கள் வன்முறை, கலவரங்களில் ஈடுபட்டு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை திருப்பி அனுப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sabarimala Protestors attacks 45 Years old woman

இந்நிலையில் இதுவரை 3 பெண்கள் சபரிமலைக்கு சென்று திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலம்மா (45).

இவர் இன்று சபரிமலைக்கு சென்றார். அப்போது நடைப்பந்தல் என்ற இடத்தில் பாலம்மாவை திரும்பி போகுமாறு போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டனர். எனினும் அவர் செல்ல மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் பாலம்மா மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் காயமடைந்த பாலம்மா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+