மீண்டும் மீண்டுமா? ராஜஸ்தானில் சச்சின் - அசோக் கெலாட் இடையே பரபர மோதல்.. உச்சமடைந்து உரசல்!
போபால்: பாஜகவின் ஊழல் என்ற தலைப்பில் ராஜஸ்தானில் சச்சின் பைலட் நாளை உண்ணாவிரத போராட்டம் செய்ய உள்ளார். அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை பாஜகவிற்கு எதிராக செய்தால் மறைமுகமாக அசோக் கெலாட்டை எதிர்க்கவே செய்கிறார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுகவில் ஏற்படும் உட்கட்சி மோதலை பார்த்து போர் அடித்தவர்களுக்கு என்று சுட சுட வந்திருக்கும் அரசியல் உட்கட்சி மோதல்தான் ராஜஸ்தான் மோதல். ராஜஸ்தானில் "மீண்டும்" அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்படுவது இது நான்காவது முறை. என்னது மீண்டும் மீண்டுமா? என்பது போல அங்கு மீண்டும் மிகப்பெரிய அரசியல் மோதல் ஏற்பட்டு உள்ளது.
முதலில் அங்கு தேர்தலுக்கு பின் யார் முதல்வர் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது ராகுல் இருவரிடமும் பேசி.. கடைசியில்.. அசோக் கெலாட் கையை தூக்கி அவரை முதல்வராக்கினார்.

அடுத்து மீண்டும் ஒன்றரை வருடத்தில் அங்கு உட்கட்சி மோதல் வந்த நிலையில், அசோக் கெலாட் தனது ஆதரவாளர்களுடன் தனியாக பேசி வந்தார். எங்கே மத்திய பிரதேசம் போல ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்று அஞ்சிய காங்கிரஸ், சச்சின் பைலட்டை அழைத்து அடுத்த முறை நீங்கள்தான் முதல்வர் என்று கூறி அவரை சமாதானம் செய்தது.
அப்போது சச்சின் பைலட் காங்கிரசில் இருந்தே விலகுவதாக இருந்தது. ஆனால் கடைசியில் பிரியங்கா காந்திதான் தலையிட்டு சச்சின் பைலட்டை சமாதானம் செய்தார். அதன்பின் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சமயத்திலும் இதே பிரச்சனை வந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் பதவி ஏற்பதாக இருந்தது.
அசோக் கெலாட் தலைவராகும் பட்சத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்குத்தான் அசோக் கெலாட் முட்டுக்கட்டை போட்டார். காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதை ராகுல் காந்தியும் நேற்று குறிப்பிட்டு பேசி இருந்தார். இதனால் கண்டிப்பாக அசோக் கெலாட் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசோக் கெலாட்.. இரண்டு பதவியையும் நான் பார்க்கிறேன்.. இல்லையென்றால்.. என்னுடைய ஆள்தான் ராஜஸ்தான் முதல்வராக வேண்டும் என்று நிலைப்பாடு எடுத்தார்.

இதனால் அசோக் கெலாட் மீது காங்கிரஸ் டாப் தலைவர்கள் கடும் அப்செட் ஆனார்கள். அதோடு அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பும் பறிபோனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் சச்சின் பைலெட் அளித்த பேட்டி ஒன்றுதான் இந்த மோதலை தூண்டிவிட்டது. அதன்படி, பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவிற்கு எதிராக இன்னும் ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அவரின் ஊழல் புகார்களை விசாரிக்கவில்லை. இதை பார்த்தால் ராஜஸ்தான் அரசு அங்கே பாஜகவுடன் டீலிங் செய்து உள்ளதோ என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுவிடும், என்று புயலை கிளப்பி உள்ளார்.
ஏற்கனவே ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் - பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா இடையே நட்பு உள்ளது. அதனால்தான் பாஜகவுடன் அவ்வப்போது இணக்கமாக செல்கிறார் அசோக் கெலாட் என்ற புகார் உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சச்சின் பைலட் இந்த புகாரை வைத்துள்ளார்.
அதோடு பாஜகவின் ஊழல் என்ற தலைப்பில் அவர் போராட்டமும் செய்ய உள்ளார். நாளை முழு நாள் உண்ணாவிரதத்தை சச்சின் பைலட் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை பாஜகவிற்கு எதிராக செய்தால் மறைமுகமாக அசோக் கெலாட்டை எதிர்க்கவே செய்கிறார் என்று கூறப்படுகிறது.
இதற்கான தேதியை சச்சின் பைலட் மிகவும் கவனமாக தேர்வு செய்துள்ளார். ஜாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலரும், கெலாட் பிறந்த மாலி சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜோதிபா பூலேயின் பிறந்தநாள் ஏப்ரல் 11 ஆகும். அதே நாளில்தான் உண்ணாவிரதத்தை சச்சின் பைலட் மேற்கொள்கிறார். , கெலாட் பிறந்த மாலி சமூகத்தைச் சேர்ந்தவர்களை திரும்பி பார்க்க வைக்கும் விதமாக சச்சின் பைலட் இப்படி செயல்படுகிறார்.
ராஜஸ்தான் அரசியலில் சச்சின் பைலட் போராட்டத்தால் அடுத்த புயல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications