Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவர்தான் என்னுடைய ஹீரோ... மரணமடைந்த ராணுவ வீரர் மனைவியின் நெகிழ்ச்சிப் பதிவு!

என்னுடைய கணவர் தான் எப்போதுமே எனது ஹுரோ என்று உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவில் பதிவிட்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : 2001ம் ஆண்டு ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து நடந்த சண்டையில் உயிரிழந்த மேஜர் தான் எப்போதுமே தனது ஹீரோ என்று முனநூலில் அவரது மனைவி பதிவிட்ட கருத்து வைரலாகி வருகிறது.

ஜூலை 1ம் தேதி 2001ம் ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தனது கணவர் மேஜர் ஷஃபீக் ஹோரியிடம் பேசும் போது சல்மா அடுத்த மூன்று நாட்களில் நிகழப் போகும் கொடூரம் பற்றி நினைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஷஃபீக் கோரி உயிரிழந்து விட்டதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

அந்த செய்தியைக் கேட்ட தருணம் எனக்கு பூமியே நின்றுவிட்டது போல இருந்தது. ஷஃபீக் உயிரிழந்த போது எனக்கு 29 வயது இருக்கும், திருமணமான பத்து ஆண்டுகளில் அவர் உயிரிழந்துள்ளார்.

நினைவுநாள் பதிவு

இந்நிலையில் ஷஃபீக்கின் 16-வது நினைவுநாளையொட்டி சல்மா முகநூலில் Being you என்று வெளியிட்ட பதிவு ஒன்றரை லட்சம் லைக்குகளை பெற்றதோடு, 42 ஆயிரம் ஷேர்களை பெற்றுள்ளது.

 உள்ளத்தால் உடன் வாழ்கிறார்

உள்ளத்தால் உடன் வாழ்கிறார்

ஷஃபீக்கிற்கு நாட்டின் மீது எவ்வளவு அன்பு என்று எனக்கு தெரியும், குழந்தைகள், மனைவியெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நான் என்னுடைய கணவரை உடலால் மட்டுமே பிரிந்து வாழ்கிறேன், ஆனால் மனதால் அவர் என்னுடன்தான் இருக்கிறார் என்று சல்மா கூறியுள்ளார். ஷஃபீக் இல்லாமல் கடந்த வாழ்க்கையின் கடின பக்கங்களையும் அதிலிருந்து தான் கற்ற பாடங்கள் என்ன என்பதையும் எடுத்து சொல்லியுள்ளார் அவர்.

 கணவர் தான் ஹீரோ

கணவர் தான் ஹீரோ

எப்போதுமே என்னுடைய ஹீரோ என்னுடைய கணவர் தான் என்று சல்மா தனது கணவரின் ராணுவ உடை அருகே நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சல்மா. அவரது தன்னம்பிக்கைக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 உண்மையான தேசப்பக்தி

உண்மையான தேசப்பக்தி

16 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஷஃபீக் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லையில் அதிகரித்து வரும் ஊடுஐவல்கள் பற்றியும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறித்தும் உள்தறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் நாம் நல்ல வாழ்க்கை வாழ எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் படும் கஷ்டத்தை சொல்வது போல இருக்கும் சல்மாவின் பதிவு உண்மையான தேசப் பக்திக்கான எடுத்துக்காட்டு எனலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+