கணவர்தான் என்னுடைய ஹீரோ... மரணமடைந்த ராணுவ வீரர் மனைவியின் நெகிழ்ச்சிப் பதிவு!
என்னுடைய கணவர் தான் எப்போதுமே எனது ஹுரோ என்று உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவில் பதிவிட்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : 2001ம் ஆண்டு ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து நடந்த சண்டையில் உயிரிழந்த மேஜர் தான் எப்போதுமே தனது ஹீரோ என்று முனநூலில் அவரது மனைவி பதிவிட்ட கருத்து வைரலாகி வருகிறது.
ஜூலை 1ம் தேதி 2001ம் ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தனது கணவர் மேஜர் ஷஃபீக் ஹோரியிடம் பேசும் போது சல்மா அடுத்த மூன்று நாட்களில் நிகழப் போகும் கொடூரம் பற்றி நினைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஷஃபீக் கோரி உயிரிழந்து விட்டதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
அந்த செய்தியைக் கேட்ட தருணம் எனக்கு பூமியே நின்றுவிட்டது போல இருந்தது. ஷஃபீக் உயிரிழந்த போது எனக்கு 29 வயது இருக்கும், திருமணமான பத்து ஆண்டுகளில் அவர் உயிரிழந்துள்ளார்.
நினைவுநாள் பதிவு
இந்நிலையில் ஷஃபீக்கின் 16-வது நினைவுநாளையொட்டி சல்மா முகநூலில் Being you என்று வெளியிட்ட பதிவு ஒன்றரை லட்சம் லைக்குகளை பெற்றதோடு, 42 ஆயிரம் ஷேர்களை பெற்றுள்ளது.

உள்ளத்தால் உடன் வாழ்கிறார்
ஷஃபீக்கிற்கு நாட்டின் மீது எவ்வளவு அன்பு என்று எனக்கு தெரியும், குழந்தைகள், மனைவியெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நான் என்னுடைய கணவரை உடலால் மட்டுமே பிரிந்து வாழ்கிறேன், ஆனால் மனதால் அவர் என்னுடன்தான் இருக்கிறார் என்று சல்மா கூறியுள்ளார். ஷஃபீக் இல்லாமல் கடந்த வாழ்க்கையின் கடின பக்கங்களையும் அதிலிருந்து தான் கற்ற பாடங்கள் என்ன என்பதையும் எடுத்து சொல்லியுள்ளார் அவர்.

கணவர் தான் ஹீரோ
எப்போதுமே என்னுடைய ஹீரோ என்னுடைய கணவர் தான் என்று சல்மா தனது கணவரின் ராணுவ உடை அருகே நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சல்மா. அவரது தன்னம்பிக்கைக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உண்மையான தேசப்பக்தி
16 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஷஃபீக் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லையில் அதிகரித்து வரும் ஊடுஐவல்கள் பற்றியும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறித்தும் உள்தறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் நாம் நல்ல வாழ்க்கை வாழ எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் படும் கஷ்டத்தை சொல்வது போல இருக்கும் சல்மாவின் பதிவு உண்மையான தேசப் பக்திக்கான எடுத்துக்காட்டு எனலாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications