சல்மான்கானுக்கு ஈஸியாக ஜாமீன் கிடைக்க என்ன காரணம் தெரியுமா?: சாத்வி சர்ச்சை கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முஸ்லீம் என்பதாலேயே நடிகர் சல்மான் கானுக்கு, கார் விபத்து வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி வெளியிட்ட கருத்தால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் சாத்வி பிராச்சி.

Salman got bail because he is a Muslim: Sadhvi Prachi

இவர், சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பற்றி இன்று கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: சல்மான் கான் முஸ்லீமாக இல்லாமல் இருந்தால், இந்த வழக்கில் ஏழைகளுக்கு நீதி கிடைத்திருக்கும். முஸ்லீம் என்பதாலேயே காங்கிரஸ் கட்சியும் சல்மான் கானுக்கு ஆதரவு அளிக்கிறது.

இந்த நாட்டில், ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு மற்றொருவகை நீதியும் செயலாக்கப்படுவது மீண்டும் நிரூபணமாகிவிட்டது. ஏழையை கொலை செய்த ஒருவருக்கு இரு நாட்கள் கூட சிறை தண்டனை இல்லை என்பதுதான் நாட்டின் நிலைமையாக உள்ளது. இவவ்வாறு பிராச்சி தெரிவித்தார்.

குடிபோதையில் கார் ஓட்டி ஒருவர் பலியான வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் தண்டனையை மும்பை ஹைகோர்ட்டு நேற்று நிறுத்தி வைத்தது குறித்து இவ்வாறு பிராச்சி கருத்து கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+