பாஜகவின் கட்டளைக்கேற்ப அவையை முடக்கும் அதிமுக: சமாஜ்வாதி கட்சி கடும் குற்றச்சாட்டு
பாஜகவின் கட்டளைக்கேற்ப அவையை அதிமுக முடக்குவதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜகவின் கட்டளைக்கேற்ப அவையை அதிமுக முடக்குவதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது அவை முடங்குகிறது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என்பதற்காகவே அதிமுக அவையை முடக்குகிறது என்று சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் அதிமுக மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அவையை முடக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications