“மனம் ஒத்து” திருமணம் செய்து கொண்ட தோழிகள் – பெற்றோருக்கு பயந்து போலீசில் தஞ்சம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் "திருமணம்" செய்து கொண்ட இரண்டு இளம்பெண்கள் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோரோன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சொப்னா.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரை சேர்ந்த நான்கி என்ற இளம் பெண்ணை சொப்னா சந்திக்க நேரிட்டது. அவர்கள் இருவரும் தோழிகளாக மாறினார்கள்.
பூனமும், நான்கியும் தினமும் சந்தித்து பேசி வந்தனர். நாளடைவில் அவர்களது நட்பு, காதலாக மாறியது.
இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனி வீட்டில் குடியேறி வாழ விரும்பினார்கள். அவர்களது இந்த திட்டம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.
லெஸ்பியன் உறவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இரு குடும்பத்தினரும் சொப்னா, நான்கிவை பிரிக்க முடிவு செய்தனர். இதனால் பயந்து போன தோழிகள் இருவரும் கடந்த 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதை அதிகாரப்பூர்வமாக பதிவும் செய்தனர்.
அவர்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்ததும் சொப்னா குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நான்கிவை விரட்ட அவர்கள் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் சொப்னா, நான்கி இருவரும் நேற்று போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் 18 வயதை கடந்தவர்கள் அவர்களை பிரிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சொப்னா, நான்கியின் இரு வீட்டாரும் அடுத்து என்ன செய்வது என்று சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications