புரி கடற்கரையில் மணற்சிற்பம்.. கருணாநிதிக்கு சுதர்சன் பட்நாயக் அஞ்சலி!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார். புரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைத்துள்ளார்.
புரி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, ஒரிசா மாநிலம் புரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
திமுக தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமாக இருந்த கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். நேற்று நடந்த அவருடைய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி உள்பட, பல தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Tribute to #Kalaignar #Karunanidhi The Legend , My SandArt at Puri beach , #Odisha pic.twitter.com/7RJBIE4Uqa
— Sudarsan Pattnaik (@sudarsansand) August 8, 2018
அந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒரிசா மாநிலம் புரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைத்துள்ளார்.
கலைஞர் - த லெஜண்ட்'க்கு அஞ்சலி என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார் சுதர்சன்.