அட அட... லாவண்டர் நிற பட்டுப் புடைவையில் தேவதையாய் ஜொலித்த சானியா மிர்சா!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் நடைபெற்ற நகைகள் அறிமுக பேஷன் ஷோவில் அழகாக பட்டுப் புடவை கட்டித் தளிர் நடை போட்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனக்கு நகைகள் மீதான ஆசை அதிகம் என்று தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற ஐ.ஐ.ஜே.டபிள்யூ பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பங்கேற்றார்.

அப்போது அவர், "விளையாட்டு வீராங்கனையாக இருந்தாலும் நானும் ஒரு பெண் தான். அதனால் தான் மற்ற பெண்கள் போல எனக்கும் நகைகள் மீது ஆசை உண்டு.
விளையாட்டு வீராங்கனையாக இருப்பதால் மற்ற பெண்களைப் போல எனக்கு எந்த ஆசையும் இருக்கக்கூடாது என்று அர்த்தம் கிடையாது" என்றார்.

அழகான லாவண்டர் நிற பட்டுப் புடவையில் வந்து, நகை வடிவமைப்பாளர் மோனி அகர்வாலின் "ஷோக்ராக்சி" என்ற பிராண்ட் நகைகளை அறிமுகம் செய்து வைத்தா சானியா மிர்சா.












Click it and Unblock the Notifications