For Daily Alerts
Just In
"சு.சுவாமி ஒரு சி.ஐ.ஏ. ஏஜெண்ட்" விமர்சனத்துக்கு மன்னிப்பு கோரினார் காங்கிரஸின் சஞ்சய் ஜா!
டெல்லி பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியை சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்று விமர்சித்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் ஜா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
1977ஆம் ஆண்டு அமெரிக்கா அதிகாரிகளுக்கு சுப்பிரமணியன் சுவாமி தகவல்களை கொடுத்து வந்தார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது. இதை வைத்து சுப்பிரமணியன் சுவாமியை சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்று சஞ்சய் ஜா விமர்சித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சஞ்சய் ஜாவுக்கு சுப்பிரமணியன் சுவாமி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் தாம் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கறிஞர்களுக்கு சஞ்சய் ஜா கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இந்த தகவலை சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Congress leader Sanjay Jha on Monday issued an 'unconditional apology' to Subramanian Swamy for calling him a 'CIA agent' following a Wikileaks expose which claimed that the Bharatiya Janata Party leader had informed a US department officer about Indira Gandhi's failing health in 1977.
Story first published: Tuesday, June 17, 2014, 14:37 [IST]